Monday, March 22, 2021

அறிவியலில் அறியாதவைகள் : ஓசோன் ஓட்டை விழுமா?

அறிவியலில் அறியாதவைகள் : ஓசோன் ஓட்டை விழுமா?:   Does the ozone hole fall?  ஓசோன் ஓட்டை விழுமா?   ஓசோன் ( o3 ) புவியை காக்கும் மண்டலமாகக் கருதப்படுகிறது இப்பேர்ப்பட்ட ஓசோன் கடந்த நூற...

Friday, June 8, 2018

நெல்லை ரெட்டியார் வரலாறு









Reddiar ரெட்டியார்
22 June 2017 ·


திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன

வ.எண். பிரிவு வாழ்ந்த இடங்கள் கோத்திரம்
1 சரவல்லியார் (தெரியவில்லை) (மூலக்கரைப்பட்டி, பலசேரி, கோலியன்குளம், தனக்கர்குளம் )வீரசவல்லியார் கோத்திரம்)


2 நெல்லியார் (ஆந்திராவில் நெல்லூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) பலசேரி, பாணான்குளம், பருத்திப்பாடு, நன்னிகுளம், திருமலாபுரம், தாழகுளம், தனக்கர்குளம், கோலியன்குளம் வீரசவல்லியார் கோத்திரம்

3 கொண்டபெல்லம் (ஆந்திராவில் கொண்டபெல்லம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) தெரியவில்லை வீரசவல்லியார் கோத்திரம்

4 கந்தலார் (ஆந்திராவில் கந்தலார் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, தாழகுளம் மிதுனபாலக் கோத்திரம்

5 இருவார்த்தார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்

6 பூணுரர் மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்
7 மச்சார் (தெரியவில்லை) ரெங்கசமுத்திரம், மூலக்கரைப்பட்டி, பதைக்கம், காடங்குளம் விசுவநாத கோத்திரம்

8 வங்காளத்தார் (தெரியவில்லை) அருணாபுரம், சூரபுரம் விசுவநாத கோத்திரம்

9 ஆலிங்கார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்
10 பிடித்தவல்லியார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்

11 பொக்கா ரெட்டி (தெரியவில்லை) சிங்கநேரி, கோலியன்குளம், மூலக்கரைப்பட்டி சிந்துபால கோத்திரம்
12 மயிலூரார் (தெரியவில்லை) கழுவூர், திருமாலாபுரம் சிந்துபால கோத்திரம்

13 சுண்டியார் (தெரியவில்லை) காரியாண்டி, பலசேரி சிந்துபால கோத்திரம்

14 ஆரூரார் (தெரியவில்லை) பதைக்கம் சிந்துபால கோத்திரம்
15 கொக்கடியார் (தெரியவில்லை) தெரியவில்லை சிந்துபால கோத்திரம்

16 பாலட்டார் (தெரியவில்லை) திருமலாபுரம், முனைஞ்சிப்பட்டி சிந்துபால கோத்திரம்

17 ஈங்குலாரு (தெரியவில்லை) கூந்தன்குளம், வெங்கட்டாபுரம், அரவ்நேரி, ஜெகனாதபுரம்(செண்பகராம நல்லூர் ) , கால்கரை, பெத்தரெங்கபுரம் பல்லமலா கோத்திரம்

18 தடையலார் (தெரியவில்லை) பதைக்கம், முனைஞ்சிப்பட்டி பல்லமலா கோத்திரம்

19 கொண்டபுரத்தார் ((ஆந்திராவில் கொண்டபுரம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி மதுராந்தக் கோத்திரம்

20 நிலவல்லியார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி, பதைக்கம் இரதணயல கோத்திரம்

21 ராஜமகேந்திரம் ((ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) வெங்கட்டாபுரம், திருமலாபுரம், ராமகிருஷ்ணபுரம், மூலக்கரைப்பட்டி, கோலியன்குளம் அனுபால கோத்திரம்

22 கொம்புரார் (தெரியவில்லை) வெங்கட்டாபுரம், மூலக்கரைப்பட்டி, சிதம்பராபுரம் பிரமல கோத்திரம்

23 கொலூரார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி கனகமள்ளா கோத்திரம்

24 கொண்டபல்லி ((ஆந்திராவில் கொண்டபல்லி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை பிரமல கோத்திரம்

25 ஒழுத்துலார் ((ஆந்திராவில் ஒங்கலூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை விஷ்ணுபால கோத்திரம்
26 பங்களூ(ர்)வார் சமூகரெங்கபுரம்,சீலாத்திகுளம்.
27 திருமங்களவார் சமூகரெங்கபுரம்,சீலாத்திகுளம்.
28 பொல்லாடிவார் சமூகரெங்கபுரம்,சீலாத்திகுளம்.
29
போலாடிவார், பத்தட்டிவார், தூர்வார், பென்னூர்வார், குண்டாலுவார், பொல்லாடிவார் இவர்கள் நெல்லை மாவட்டம், சமூகரெங்கபுரம்,நக்கனேரி, பருத்திப்பாடு கிராமத்தில் வாழ்கின்றனர்

விடுபட்டதை தெரிவிக்கவும்..

Saturday, September 30, 2017

அகஸ்த்தியர்



சித்தர்களின் குரல்.
*அகத்தியர் என்பவர் ஒரு சாதாரண சித்தர் அல்ல.....*
மிக மிக அதீதமான சக்தி படைத்த பிரபஞ்ச சக்தியையே தனக்குள் ஒடுக்கி, சமநிலை படுத்தி ஆளக் கூடிய மிகப் பெரிய ஆற்றல் படைத்த யோகியாவார்.
அகத்தியர் கடல் நீரை குடித்து, உள்ளே இருக்கும் 'வாதாபி' என்னும் அரக்கனை தனக்கு உணவாக்கி அழித்தார் என்று ஒரு தகவல் உள்ளது. இந்த கதைக்கு பின்னால் உண்மையில் நடந்தது என்ன? வாருங்கள் அந்த அறிவியல் உண்மையை உணர்ந்து கொள்ள.
அகத்தியர் என்பவர் கும்பமுனி. ஜாதகரீதியாக சூரியன் சிம்மராசியில் இருந்து மறைந்து கும்பராசிக்கு உதயமாகும் நேரத்தில் வானில் ஒரு நட்சத்திரம் உதிக்கும். அந்த நட்சத்திரத்திற்கு வெளிநாட்டினர் வைத்துள்ள
பெயர் 'கானோபஸ்' நட்சத்திரம் (Canopus star). ஆனால் நம் இந்திய வானியல் சாஸ்திரத்தில் அதற்கு 'அகஸ்திய நட்சத்திரம்' என்று பெயர். தென் வானத்தில் பிரகாசிக்கும் இந்த நட்சத்திரம் அபூர்வ ஆற்றலோடு எப்பொழுதும் ஜொலித்துக் கொண்டிருக்கும். இதனுடைய ஒளி ஆண்டு என்பது எழுநூறு ஒளி ஆண்டுகள் ஆகும்.
இந்த 'கானோபஸ்' என்பதன் அர்த்தம் 'குடம்' என்பதாகும். இதனுடைய நிறம் 'மஞ்சள்' நிறமாகும். மிகப்பெரிய ஒளியைக் குடுக்கக்கூடிய நட்சத்திரமாக இந்த அகஸ்திய நட்சத்திரம் விளங்கும்.
இதனுடைய காந்த அலைநீளம் 0.86. அகத்தியருடன் கூட இருக்கும் ஒரு நட்சத்திர தொகுப்பின் பெயர் 'ஆர்கோ' (Argo Navis).
இதில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திர கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரம் தான் அகத்திய நட்சத்திரம் (Canopus star). கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இது இருந்தாலும்,
கிட்டத்தட்ட சூரியனுக்கு நிகராக 13,600 மடங்கு ஒளியுடன் மற்ற நட்சத்திரங்களை விட ஜொலிக்கும். இதனுடைய பிரகாசம் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை.
அதே நேரம் அகத்தியருக்கு அருகில் இருக்கக்கூடிய நட்சத்திரம் 'டோராடஸ்' (Doradus star). இதற்கு தமிழில்
'லோபமுத்ரா' என்று பெயர். இதை ஐரோப்பிய நாட்டில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. இந்த நட்சத்திர பெயர்கள் விவரம் கிரேக்கம், இலத்தீன் போன்ற பழமை வாய்ந்த மொழி நாட்டவர்களுக்கு தெரிந்துள்ளது.
ஆனால் இந்த விவரங்களை எல்லாம் நம் தமிழ் மொழியில் இருந்து தான் அவர்கள் ஆங்கிலத்தில் பெயர் சூட்டியுள்ளனர்.
இதில் உள்ள முக்கியமான அறிவியல் உண்மை என்னவென்றால்,
இந்த அகஸ்திய நட்சத்திரம் பூமியை நோக்கி வரும் போது, கடல் நீர் பகுதி வற்ற ஆரம்பிக்கும். அதே போல் இந்த நட்சத்திரம் மிகவும் ஆகர்ஷனத்தோடு உதிக்கும் போது, இதன் கதிர்வீச்சால்
'அகத்திப் பூ' என்னும் பூ மலர ஆரம்பிக்கும். இது போல் நிறைய விஷயங்கள் அகஸ்திய நட்சத்திரம் பற்றி கூறி கொண்டே போகலாம். இந்த அகஸ்திய நட்சத்திரம் தமிழ் மாதம் புரட்டாசி 17 - 23 தேதிக்குள் உதிக்கும்.
சூரியன் ரோகிணி நட்சத்திரத்திற்கு போகும் போது, இந்த அகஸ்திய நட்சத்திரம் மறைந்து, மீண்டும் சூரியன் ஹஸ்த நட்சத்திரத்திற்கு வரும் போது நம் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்.
முக்கியமாக நான்கு மாத காலமாக சூரிய ஒளியால் அகஸ்திய நட்சத்திரம் நம் கண்களுக்கு மறைந்து விடும். இந்த நட்சத்திரம் தோன்றும் போது, மழைக்காலம் முடிந்து, திரும்பவும் வெயில் காலம் ஆரம்பிக்கும். அப்போது கடல் நீர் வற்ற ஆரம்பிக்கும்.
ஆனால் நடக்கும் உண்மை என்னவென்றால் இந்த நட்சத்திரத்தின் ஆகர்ஷன சக்தியினால் கடல் நீரில் உள்ள உப்பின் தன்மை குறைய ஆரம்பித்து, வேகமாக வற்ற ஆரம்பிக்கும். இதைத்தான் மறைமுகமாக அகத்தியர் கடல் நீரை குடித்து, உள்ளே இருக்ககூடிய 'வாதாபி' என்னும் அரக்கனை அழித்தார் என்று கூறுகிறார்கள்.
இது போல் நமது மகாகுரு அகத்தியருக்கு பின்னால் மிகப் பெரிய அறிவியல் இரகசியங்கள் புதைந்துள்ளது. இதையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக் கூடிய மிகப் பெரிய பொறுப்பு நமக்குள்ளது.
- *சித்தர்களின் குரல்