பளபளக்கும் பளிங்கு மாளிகை.
Wednesday, June 30, 2010
Tuesday, June 29, 2010
அவ்வைத் தமிழ்
தமிழ்ப் பாட்டி
அவ்வைத் தமிழ்
என் காலத்தில் (ஐயோ, ரொம்ப ஒன்றும் இல்லை , சுமார் முப்பத்தைந்து வருடம் முன்பு தான்), சிலேட்டும பலப்பமும் கையுமாய் பள்ளிக்கு போனவன் எல்லாம், அவ்வையை அறியாமல் இருக்க முடியாது. ஏன், இன்றும் அவ்வை இல்லாமல் தமிழ் ஆரம்பப் பாடம் இல்லை.
ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனையும் கொடுத்த கவித் தெய்வம் அவ்வை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கு என் வயதில் எல்லோர் மனதிலும் வேரூன்ற அந்தப் பாட்டியன்றோ காரணம் ? மணப் பிராயத்திலேயே இளமையைத் துறந்து, என்றும் முதுமை வேண்டி நின்ற கருணைத் தெய்வம் அவள். உலகில் அல்லலுறும் மானிடர் பேரில் அவ்வைக்கு அவ்வளவு பரிவு !
அவ்வையார் என்பவர் யார் , எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாளர்கள் பல விதமாய்ப் பேசுகிறார்கள். ஆனால் என் சுதந்திரம் பழத்தை மட்டுமே ருசிப்பது; வேரை நோண்டுவதல்ல. அவ்வையின் கனிகளாகிய பாடல்கள் மட்டுமே எனக்கு வேண்டும்.
சிறு வயதில் ஏனோ தானோ வென்று படித்தாலும் , முப்பது வயதுக்கு மேல் தான் அவ்வையின் அருமை எனக்குப் புரிந்தது. நல்வழியும், மூதுரையும் தமிழ்ப் பொக்கிஷங்கள் என்பது என் மண்டைக்கு அப்போதுதான் உறைத்தது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பழ மொழிகள் அவ்வையின் பாட்டுக்களிலிருந்தே கடன் வாங்கியவை. இந்தப் பாட்டைக் கவனியுங்கள்
சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்;-
நடையும் நடைப்பழக்கம்; நட்பும்
தயையும் கொடையும் பிறவிக்குணம்.
இந்தப் பாடலின் சொல்லும் , பொருளும் இடி போன்ற முழக்கத்தோடு இறங்கும். ஆனால் இதனுள்ளே குறைந்தது இரண்டு பழ மொழிகள் நாம் தேடிக் கண்டு பிடிக்கலாம். அவ்வை தமிழ் மொழியோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்டவள்.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.
இதிலும், கடைசி வரி அடிக்கடி சுட்டப்படும் ஒன்றாகும்.
நான் அவ்வையின் பாடல்களில் மிகவும் விரும்பும் ஒன்று இதோ
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
நட்டாலும நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)
(பால் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாததைப் போல, எதிரிகள் எவ்வளவு பழகினாலும், நண்பர்கள் அல்லர். சங்கைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் அது கருக்காமல் வெண்மையான சுண்ணத்தையே தருவது போல, நற்பிறப்பு வாய்த்த மக்கள் வறுமை வரினும் மேன்மையோடு இருப்பார்)
இதோ இன்னொன்று
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
(நிமிர்ந்து தளராது வளரும் தென்னை வேரிலே ஊற்றிய நீரைச் சுவையாக்கி தலையில் இளநீராகத் தருவது போல , தான் செய்த நன்றி பலமடங்காகத் திரும்பி வரும். ஆகவே அது என்று வரும் என்பது குறித்துப் பேசற்க.)
மேலே கூறியவை அனைத்தும் சமுதாய, மற்றும் அறவழிப் பாடல்கள். அவ்வைக்கு ஒப்புயர்வற்ற ஆன்மீகப் பக்கம் ஒன்று உண்டு. விநாயகனின் சிறந்த பக்தை அவ்வை என்பது நாம் அறிந்ததே. "வாக்கு உண்டாம், நல்ல மனமுண்டாம் ..." என்று தொடங்கும் பாடல் அவ்வையுடையது தான். ஆனால், என் அன்றாட ஆன்மீக வழிபாட்டிற்கு நானும் என் குடும்பமும் பாடும் ஒரு பாடல் அவ்வை வாய் வந்ததுதான். அது பாடல் என்று சொல்வதை விட, யோக நெறியின் முற்றிய விளக்கம் என்றே சொல்லலாம். அந்தப் பாட்டு " விநாயகர் அகவல்"
அந்தப் பாட்டு இதோ கீழே உள்ள இணைப்பில்.சொடுக்குங்கள். நம் தமிழகத்தின் சிகரப் பாடகர், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இறவாப் பாடல்.
விநாயகர் அகவல் முழுவதையும் படிக்க விரும்புபவர்கள் இதோ இந்த இணைப்பிலிருந்து தங்கள் கணினிக்கு இறக்கிக் கொள்ளலாம். கீழ் உள்ள வரியின் மேல் சொடுக்குங்கள்.
விநாயகர் அகவல் பாட்டு
முடிக்கவே மனமில்லை. இதோ ஒரு முத்தாய்ப்பு.
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
( ஆறு கோடையில் வற்றிய நிலையிலும் தன் மணல் ஊற்றால் உலகுக்கு நீரூட்டும். அது போல் நல்ல குடிப்பிறந்தார் வறியவர் ஆனாலும் மனம் ஒப்பி இல்லை எனச் சொல்ல மாட்டார்.)
ஔவையார் உங்களையும் சிந்திக்கத் தூண்டினால் மகிழ்வேன்.
என் காலத்தில் (ஐயோ, ரொம்ப ஒன்றும் இல்லை , சுமார் முப்பத்தைந்து வருடம் முன்பு தான்), சிலேட்டும பலப்பமும் கையுமாய் பள்ளிக்கு போனவன் எல்லாம், அவ்வையை அறியாமல் இருக்க முடியாது. ஏன், இன்றும் அவ்வை இல்லாமல் தமிழ் ஆரம்பப் பாடம் இல்லை.
ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனையும் கொடுத்த கவித் தெய்வம் அவ்வை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கு என் வயதில் எல்லோர் மனதிலும் வேரூன்ற அந்தப் பாட்டியன்றோ காரணம் ? மணப் பிராயத்திலேயே இளமையைத் துறந்து, என்றும் முதுமை வேண்டி நின்ற கருணைத் தெய்வம் அவள். உலகில் அல்லலுறும் மானிடர் பேரில் அவ்வைக்கு அவ்வளவு பரிவு !
அவ்வையார் என்பவர் யார் , எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாளர்கள் பல விதமாய்ப் பேசுகிறார்கள். ஆனால் என் சுதந்திரம் பழத்தை மட்டுமே ருசிப்பது; வேரை நோண்டுவதல்ல. அவ்வையின் கனிகளாகிய பாடல்கள் மட்டுமே எனக்கு வேண்டும்.
சிறு வயதில் ஏனோ தானோ வென்று படித்தாலும் , முப்பது வயதுக்கு மேல் தான் அவ்வையின் அருமை எனக்குப் புரிந்தது. நல்வழியும், மூதுரையும் தமிழ்ப் பொக்கிஷங்கள் என்பது என் மண்டைக்கு அப்போதுதான் உறைத்தது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பழ மொழிகள் அவ்வையின் பாட்டுக்களிலிருந்தே கடன் வாங்கியவை. இந்தப் பாட்டைக் கவனியுங்கள்
சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்;-
நடையும் நடைப்பழக்கம்; நட்பும்
தயையும் கொடையும் பிறவிக்குணம்.
இந்தப் பாடலின் சொல்லும் , பொருளும் இடி போன்ற முழக்கத்தோடு இறங்கும். ஆனால் இதனுள்ளே குறைந்தது இரண்டு பழ மொழிகள் நாம் தேடிக் கண்டு பிடிக்கலாம். அவ்வை தமிழ் மொழியோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்டவள்.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.
இதிலும், கடைசி வரி அடிக்கடி சுட்டப்படும் ஒன்றாகும்.
நான் அவ்வையின் பாடல்களில் மிகவும் விரும்பும் ஒன்று இதோ
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
நட்டாலும நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)
(பால் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாததைப் போல, எதிரிகள் எவ்வளவு பழகினாலும், நண்பர்கள் அல்லர். சங்கைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் அது கருக்காமல் வெண்மையான சுண்ணத்தையே தருவது போல, நற்பிறப்பு வாய்த்த மக்கள் வறுமை வரினும் மேன்மையோடு இருப்பார்)
இதோ இன்னொன்று
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
(நிமிர்ந்து தளராது வளரும் தென்னை வேரிலே ஊற்றிய நீரைச் சுவையாக்கி தலையில் இளநீராகத் தருவது போல , தான் செய்த நன்றி பலமடங்காகத் திரும்பி வரும். ஆகவே அது என்று வரும் என்பது குறித்துப் பேசற்க.)
மேலே கூறியவை அனைத்தும் சமுதாய, மற்றும் அறவழிப் பாடல்கள். அவ்வைக்கு ஒப்புயர்வற்ற ஆன்மீகப் பக்கம் ஒன்று உண்டு. விநாயகனின் சிறந்த பக்தை அவ்வை என்பது நாம் அறிந்ததே. "வாக்கு உண்டாம், நல்ல மனமுண்டாம் ..." என்று தொடங்கும் பாடல் அவ்வையுடையது தான். ஆனால், என் அன்றாட ஆன்மீக வழிபாட்டிற்கு நானும் என் குடும்பமும் பாடும் ஒரு பாடல் அவ்வை வாய் வந்ததுதான். அது பாடல் என்று சொல்வதை விட, யோக நெறியின் முற்றிய விளக்கம் என்றே சொல்லலாம். அந்தப் பாட்டு " விநாயகர் அகவல்"
அந்தப் பாட்டு இதோ கீழே உள்ள இணைப்பில்.சொடுக்குங்கள். நம் தமிழகத்தின் சிகரப் பாடகர், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இறவாப் பாடல்.
விநாயகர் அகவல் முழுவதையும் படிக்க விரும்புபவர்கள் இதோ இந்த இணைப்பிலிருந்து தங்கள் கணினிக்கு இறக்கிக் கொள்ளலாம். கீழ் உள்ள வரியின் மேல் சொடுக்குங்கள்.
விநாயகர் அகவல் பாட்டு
முடிக்கவே மனமில்லை. இதோ ஒரு முத்தாய்ப்பு.
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
( ஆறு கோடையில் வற்றிய நிலையிலும் தன் மணல் ஊற்றால் உலகுக்கு நீரூட்டும். அது போல் நல்ல குடிப்பிறந்தார் வறியவர் ஆனாலும் மனம் ஒப்பி இல்லை எனச் சொல்ல மாட்டார்.)
ஔவையார் உங்களையும் சிந்திக்கத் தூண்டினால் மகிழ்வேன்.
Monday, June 28, 2010
APJ Abdul Kalam:"A Leader Should Know How to Manage Failure"
கனவு கண்டவர். கண்ட கனவுகளை நிஜமாக்கிக் காட்டியவர்.பிறரையும் கனவு காணுங்கள் என்று சொன்னவர்.
அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் (27/06/10) நிகழ்ச்சிகள்
தமிழில் சிறந்த மென்பொருளை தயாரித்ததற்காக, "பனேசியா டிரீம் வீவர்ஸ்" மென்பொருள் நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருதை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
யாரும் பணம் வாங்கலை!
தாம் இசையமத்த செம்மொழிப் பாடலை,கௌதம் மேனன் தான் படம்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இரஹ்மான், தமிழை உலகளாவிய ஒரு விஷயமாக இந்தப் பாடலின் மூலம் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றாராம்.
அரசு தரப்பிலிருந்து ஒருங்கிணைப்பு செய்த கனிமொழியோ தமிழ்ப் பாரம்பரியம் பரிமளிக்க, மண் வாசனையோடு இருக்க வேண்டும் என்றாராம்.
வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் கடலை ஒட்டி, செம்மொழியான தமிழ் மொழியே என்ற மெகா சைஸ் எழுத்துக்களின் பின்னணியில், ஒரு பிரம்மாண்டமான மேடையில், சீனியர் மோஸ்ட் டி.எம்.எஸ்., பி.சுசீலா தொடங்கி ஷ்ருதி ஹாசன் வரை மொத்தம் 40 பாடகர், பாடகிகள் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
புதுமணத் தம்பதிக்கு ஆரத்தி எடுத்து அவர்கள் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு நல்வரவு வண்ணக்கோலம்;
எனப்பாடல் நெடுக கௌதம் மேனனின் முத்திரைகள்.
மௌலி
"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவாகி உள்ளது,'' என்று, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு நேற்று (28/06/10) அவர் அளித்த பேட்டி:-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவான, ஜூன் 23 அன்று, பந்தலில் இருந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம். அன்று மாலை நடந்த அலங்கார ஊர்திகளின் எழிலார் பவனியை, சாலையின் இரு புறமும் நின்று கண்டு களித்தோரின் எண்ணிக்கை ஐந்து இலட்சம்.
ஜூன் 24 முதல் 26 வரை, மாநாட்டுப் பந்தலில் நடந்த கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் தினமும் ஒன்றரை இலட்சம் பேர் பங்கேற்றனர். பொதுக்கண்காட்சியை மணிக்கு 3,000லிருந்து 4,000 பேர் வரை பார்வையிட்டனர். நான்கு நாட்களில், ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரில், 129 கட்டுரைகளும், 34 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் 3,100 பேருக்கு சிறப்பு மலர் வழங்கப்பட்டன.
மக்கள் 2,300 பேர், விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
பல்வேறு ஏடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட மலர்கள், கணக்கில் கொள்ளப்படவில்லை.
தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை 110.
மாநாட்டில் பதிவு பெற்று பங்கேற்றவர்கள் 300 பேர்.
தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற 200 பேரையும் சேர்த்து இம்மாநாட்டில் 500 தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இணைய மாநாடு சிறப்பு மலரில், 130 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
பொதுக்கண்காட்சிக்கு வந்த மக்களில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தினமும் இணைய கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
தினமும் ஒரு முகப்பரங்கம் என்ற அளவில் நடந்த நான்கு முகப்பரங்கங்களில், ஒவ்வொன்றிலும் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரசால் மானியம் வழங்கப்பட்ட உணவுக் கூடங்களில், நான்கு இலட்சம் பேருக்கு 30 ரூபாய்க்கு சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் 2,605 பேர், 92 ஓட்டல்களில் உள்ள 1,642 அறைகளில் தங்கியிருந்தனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவானது.
இந்த மாநாட்டையொட்டி, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், புதிய சாலைகள், இணைப்புச்சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புக்கு 243 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நடந்த ஆய்வரங்கங்களில், 239 அமர்வுகளில் 55 பொருண்மைகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மாநாட்டுக்காக, 50 வெளிநாடுகளில் இருந்து 840 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் கட்டுரை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 152.
இலங்கையிலிருந்து 38
மலேசியாவிலிருந்து 23
சிங்கப்பூரிலிருந்து 22
அமெரிக்காவிலிருந்து 14
கனடாவிலிருந்து 11
இங்கிலாந்திலிருந்து 9
ஜெர்மனியிலிருந்து 5
ஆஸ்திரேலியாவிலிருந்து 4
மொரீஷியசிலிருந்து 3
என்ற எண்ணிக்கையில் அறிஞர்கள் வந்து கட்டுரை சமர்ப்பித்தனர்.
இவற்றைத் தவிர்த்து,
பிரான்ஸ்
சீனா
செக் குடியரசு
ஹாங் காங்
கிரீஸ்
நெதர்லாந்து
பின்லாந்து
ஜப்பான்
நியூ சிலாந்து
தென்னாப்ரிக்கா
நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இங்கு வந்து, கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
பேட்டியின்போது, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கனிமொழி எம்.பி., மாநாட்டு சிறப்பு அலுவலர் அலாவுதீன், மாவட்ட ஆட்சியர் உமாநாத், கோவை மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.
பட்டியலும், பாராட்டும்:-
நேற்றைய (28/06/10) பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முதல்வர் கருணாநிதி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். பேட்டியைத் துவக்கும் முன், அனைத்து பத்திரிகையாளர்களையும் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்த முதல்வர், "வணக்கம், வாழ்த்துக்கள், நன்றி" என்றார்.
ஜனாதிபதி, கவர்னர், மத்திய அமைச்சர்கள் துவங்கி, மாநாட்டுப் பந்தல் அமைத்த பந்தல் சிவா வரையிலும் நீளமாக பெயர்ப் பட்டியலை வாசித்து, அத்தனை பேருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார் முதல்வர். குறிப்பாக, காவல்துறையினருக்கு நன்றி கூறிய அவர், "சிறு பிரச்னை கூட எழாத அளவுக்கு 11 ஆயிரம் பேரைக்கொண்டு பாதுகாப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
சிறப்பாக நன்றிக்குரியவர்கள் என்று பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினரைக் குறிப்பிட்டு புன்னகைத்தார்.
எல்லாரையும் விட, அமைதியோடும், மகிழ்ச்சியோடும் இந்த மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் முதல்வர்.
நன்றி:- தினமலர்
தமிழுக்கென்றே அமைந்த மேடையில் தமிழைப் பற்றிப்பேச எண்ணற்ற செய்திகள்
இருக்கத் தொண்டர்கள் ஏதேதோ பேசிவருவதைக் கேட்கிறோம்.ஐரோப்பியக் கூட்டமைப்பின் மேடையில் டாக்டர் கலாம் அவர்கள்
பூங்குன்றனாரின் பொருத்தமான வரியைக் கூறினார்.
டாக்டர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது, ஐரோப்பியக்
கூட்டமைப்பின் பாராளுமன்றத்தில் அவர்களது பொன்விழாவை ஒட்டி ஒரு
சிறப்புரை ஆற்றினார்.
அப்போது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் வரியையும், அதன்
விளக்கத்தையும் அவர் கூறுவதைக் கேட்க –
http://www.youtube.com/watch?v=Uu-0vTOHJ44
(நன்றி : Prime Point ஸ்ரீநிவாஸன்)
யாதும் ஊரே, யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
- கணியன் பூங்குன்றனார்
( புறநானூறு 192)
Subscribe to:
Posts (Atom)















